மேகாலயாவில் அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட வெடிபொருள் பறிமுதல்

0 1315

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 305 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 24 அலுமினிய எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் பாக்கெட்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தின் வழியாக வெடிமருந்து கடத்திச் செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பைர்னிஹாட் போலீஸ் அவுட்போஸ்ட் அருகே படைப்பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தச் சாலையில் வந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 305 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 24 அலுமினிய எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments