"பீப்" பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

0 5057
"பீப்" பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

"பீப்" பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

நடிகர் சிம்பு கடந்த 2015ம் ஆண்டு இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. அப்பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்திருப்பதாக சிம்பு, அனிருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டன.

கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

புகாருக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி கோவை போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, சென்னையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments