பிற மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு - முதலமைச்சர் அறிவிப்பு

0 1888
சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 800 அரங்குகள் கொண்ட 45 வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேடையில் பேசிய அவர், உயரிய எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் வீடு கட்டித்தரப்படும் என்றார்.

தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒன்றரை லட்சம் புத்தகங்களை வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்த முதலமைச்சர், தான் எழுதியுள்ள "உங்களின் ஒருவன்" என்ற புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழாவின் போது கலைஞர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என நினைவுகூர்ந்த முதலமைச்சர், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தலுக்கு பின் நல்ல அறிவிப்புகள் வெளிவரும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments