சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டி ஒருவர் பலி

0 1626
சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டி ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார்.

அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி கோவில் மாசி மக பெருவிழாவின் நிறைவு நாளையொட்டி நடந்த இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன.

இதில் மாடு முட்டியதில் மதுரை மாவட்டம் கீழையூர் கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய சுந்தரம் என்பவர் உயிரிழந்தார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், பலர் மாடுகள் முட்டி காயமடைந்தனர்.

மஞ்சுவிரட்டை மலைக்குன்றின் மீது அமர்ந்த படியும் சுற்றி நின்றவாறும் ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments