ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு

0 1840
ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்குள்ள பெட்ரோபோலிஸ் நகரில் ஆறு மணி நேரத்திற்குள்ளாக 25.9 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு , ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 23 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments