Wi-Fiஐ துண்டித்ததால் ஆத்திரம்.. பெற்றோர் மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவன்..

0 1706
ஸ்பெயினில், 15 வயது சிறுவன் வீட்டில் Wi-Fiஐ துண்டித்த ஆத்திரத்தில் தனது பெற்றோரையும், சகோதரனையும் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில், 15 வயது சிறுவன் வீட்டில் Wi-Fiஐ துண்டித்த ஆத்திரத்தில் தனது பெற்றோரையும், சகோதரனையும் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்சே நகரில் வசித்து வந்த அந்த சிறுவன் பள்ளியில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால் பெற்றோர்கள் அவனை கண்டித்ததோடு, வீட்டில் வைஃபை இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவன் வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மூவரையும் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

3 நாட்களாகியும் எந்த தகவலும் வராததால் சந்தேகமடைந்த சிறுவனின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுவனிடம் விசாரித்த போது, சிறுவன் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளான்.

பெற்றோரை கொலை செய்த சிறுவன், 3  நாட்களாக சடலங்களுடன் தனியாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments