புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என எந்த மாநிலத்தையும் மத்திய அரசு வற்புறுத்தவில்லை - மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

0 1374

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என எந்த மாநிலத்தையும் மத்திய அரசு வற்புறுத்தவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறிய கருத்து தவறானது என்றும் அவர் மறுப்பு வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தை அளவிடும்படி மாநிலங்களை, மத்திய அரசு வற்புறுத்துவதாகவும் தெலங்கானா முதல்வர் கூறியுள்ளார்.

இதுவும் முற்றிலும் பொய்.இது போன்ற பொய்யான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்கள், கவுரவமான முதல்வர் பதவி வகிக்கும் நபருக்கு உகந்ததல்ல என்று ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments