இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு..!

0 2102

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒழையூர் கிராமத்தைச் சேர்ந்த டில்லி என்பவர் தனது டிவிஎஸ் எக்சல் வாகனத்தில் பக்கத்து கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். நெல்வாய் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே அதிவேகமாக வந்த டி.வி.எஸ் அப்பாச்சி வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட டில்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

அப்பாச்சி வாகனத்தில் வந்த இளைஞர் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், டில்லியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments