கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை காப்பாற்றிய காவலரை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்த கூடுதல் டி.ஜி.பி

0 1920

புதுச்சேரியில், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர் சவுந்தரராஜனை, கூடுதல் டி.ஜி.பி., நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த விஷ்ணு, சபரிஷ் ஆகிய இளைஞர்கள், நேற்று புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த கடலோர காவல் படை காவலர் சவுந்தரராஜன் சீருடையுடன் கடலில் இறங்கி இருவரையும் மீட்டார். இதனையறிந்த கூடுதல் டி.ஜி.பி., ஆனந்தமோகன், காவலர் சவுந்தரராஜனை நேரில் அழைத்து பாராட்டியதோடு அவரது பணியால் காவல்துறை பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments