48 ஆண்டுகளில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது..!

0 2097

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 48 ஆண்டுகளில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசாவின் கேந்திரபாரா(Kendrapara) மாவட்டத்தை சேர்ந்த அவர், முதன் முதலில் 1982 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணை மணந்துள்ளார். பிறகு 2002 ஆம் ஆண்டில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் 2-ஆவதாக வேறோரு பெண்ணை மணந்துள்ளார்.

இந்த இரு மனைவிகள் மூலம் 5 குழந்தைகளை பெற்றுள்ளார். 2002 முதல் 2020 வரை திருமண இணையம் மூலம் டெல்லி, அசாம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலும் விவாகரத்தான வசதிபடைத்த பெண்களை குறிவைத்து, தான் ஒரு டாக்டர் எனக் கூறி அவர்களை மணந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 14-ஆவதாக டெல்லியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவரை பற்றிய உண்மையை தெரிந்துக்கொண்ட அந்த பெண்மணி புகார் கொடுத்த நிலையில் தற்போது போலீஸ் பிடியில் சிக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments