உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு

0 2618

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில், அந்நாட்டு எல்லைகளில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே உக்ரைனில் தங்கியுள்ள தங்கள் நாட்டினர் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது இந்தியாவும் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகரிலுள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், குறிப்பாக இந்திய மாணவர்கள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைனில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுவதால், இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைன் மீது நாளை ரஷ்யா போர்தொடுக்கலாம் என அந்நாட்டு அதிபர் விளாதிமீர் ஜெலன்ஸ்கி தமது முகநூலில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments