தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.!

0 2088

தெற்கு பொலிவியா Chuquisaca மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர்.

Chuquisaca மாகாணத்தில் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தில் சரிந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments