திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்படமாட்டாது ; தேர்வுத்துறை

0 1983
திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்படமாட்டாது ; தேர்வுத்துறை

தமிழகத்தில் இனிமேல் திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்ப ப்படமாட்டாது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் திருப்புதல் தேர்வின் வினாத்தாள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்வுக்கு முன்பே திருவண்ணாமலையில் வெளியானது.

இதே போல சென்னையில் 12 ஆம் வகுப்புக்கான அறிவியல் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வாட்ஸ் அப்பில் வெளியானது. இதுகுறித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற விசாரணை தொடர்பான அறிக்கை பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் சமர்பிக்கப்பட்டது.

இதே போன்று சென்னையில் நடைபெற்ற ஆய்வின் அறிக்கையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இனிமேல் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments