விவசாய இடுபொருட்களைக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிறது - பிரதமர் நரேந்திர மோடி

0 1559
விவசாய இடுபொருட்களைக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிறது - பிரதமர்

விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்களை உலகச் சந்தையைவிடக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜலந்தரில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கோவிலில் வழிபாடு நடத்தத் தாம் விரும்பிய நிலையில், அதற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய இயலாது என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தெரிவித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

பஞ்சாபில் 23 இலட்சம் விவசாயிகளுக்கு உழவர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இயற்கை வேளாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments