கோவையில் தேர்தல் பணிக்காக முகாமிட்டுள்ள வெளிமாவட்ட திமுகவினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை.!

0 2314

கோவையில் தேர்தல் பணிக்காக முகாமிட்டுள்ள வெளிமாவட்ட திமுகவினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவைப்புதூரில் ஒரு வீட்டில் திமுகவினர் பரிசுப் பொருட்களை வைத்துள்ளதாகக் கூறி அதிமுகவினர் அங்குத் திரண்டனர். திமுகவினரின் காருக்குள் பரிசுப் பொருட்களை மறைத்து வைத்துள்ளதாகக் கூறி காரைச் சோதனையிட வலியுறுத்தினர்.

விரைந்து சென்ற காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்து ராமநாதபுரம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும் காவல் நிலையத்துக்கு வந்து விடுவிக்கக் கோரியதையடுத்து 9 பேரும் விடுவிக்கப்பட்டனர். காவல்துறையைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், தொண்டர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments