கர்நாடகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு..!

0 5477

கர்நாடக மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஹிஜாப் விவகாரத்தால் ஒரு சில கல்வி நிறுவனங்களில் வன்முறை நிகழ்ந்ததையடுத்துக் கடந்த வாரம் புதன்கிழமை முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை கல்லூரிகளுக்கு ஹிஜாப்போ, வேறெந்த மதம் சார்ந்த உடையோ அணிந்து செல்லக் கூடாது எனக் கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்கவும் உத்தரவிட்டது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments