நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு தர முடியாத காங்கிரஸ் ஆட்சியை விரட்டி பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்.!

0 2315

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு தர முடியாத காங்கிரஸ் ஆட்சியை விரட்டி பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பஞ்சாபில் வாக்காளர்களிடம் மத்தியஅமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்தார்.

பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்த அவர் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்தார்.

அமிர்தசரஸ் வடக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அமித்ஷா பஞ்சாப்பை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதியளித்தார். பஞ்சாப் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படக்கூடிய மாநில அரசை தேர்ந்தெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

லுதியானாவில் பிரச்சாரம் செய்த அமித்ஷா பஞ்சாபில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நான்கு நகரங்களில் போதைத் தடுப்புப் பிரிவு அலுவலகம் திறக்கப்படும் என்று கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments