பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க இயலாதவர் பஞ்சாப் முதலமைச்சர்.. எவ்வாறு மாநில மக்களை பாதுகாப்பார்? அமித்ஷா கேள்வி

0 1760

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க இயலாத பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி, எவ்வாறு மாநில மக்களை பாதுகாப்பார்? என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாபில் பிரதமர் வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு விமர்சித்தார். அம்மாநிலத்தின் லூதியானாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, மக்கள் ஏற்கனவே ஆட்சியளிக்க வாய்ப்பளித்தும், காங்கிரஸ் கட்சி நன்மைகள் ஏதும் செய்யவிலை என்றார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் மாவட்ட வாரியாக குழு அமைத்து போதைப் பொருள் பயன்பாடு, அதனை விநியோகிக்கும் கும்பல் அனைத்தும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments