ஹிஜாப் விவகாரம்-உடுப்பி மாவட்டத்தில் நாளை முதல் பிப்.19 வரை 144 தடை உத்தரவு அமல்

0 2454

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் நாளை முதல் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் சில இடங்களில் அவ்விவகாரம் தொடர்பாக வன்முறை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து, திங்கட்கிழமையில் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், உடுப்பி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் சுற்றி 200 மீட்டர்கள் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments