பீகாரில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் என அறிவிப்பு

0 1259

பீகாரில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த உத்தரவு வரை அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் வழக்கம் போல இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பராமரிக்கவும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments