ஒரு பெட்டி மாம்பழத்தை 31,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பழ வணிகர்... சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்குமாம்..

0 3134
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வணிகர் ஒருவர் ஒரு பெட்டி மாம்பழத்தை 31ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வணிகர் ஒருவர் ஒரு பெட்டி மாம்பழத்தை 31ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

மாங்காய் காய்ப்பு தொடங்கியதும் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்கும் என்கிற நம்பிக்கை புனே வணிகர்களிடையே உள்ளது.

இதனால் ரத்தினகிரி மாவட்டத்தில் இருந்து புனே சந்தைக்கு வந்த ஹாபுஸ் வகை மாம்பழங்கள் 60 எண்ணம் கொண்ட ஒரு பெட்டியை யுவ்ராஜ் கச்சி என்கிற வணிகர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

இதேபோல் வெவ்வேறு விலைகளில் அவர் மொத்தம் 5 பெட்டி மாம்பழங்களை ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments