குப்பையில் காணாமல் போன 5 சவரன் நகையை 3 மணி நேரமாக தேடி உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்.!

0 2429

சிவகங்கையில் காணாமல் போன ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை சுமார் 3 மணி நேரம் குப்பைமேட்டில் தேடிக் கண்டுபிடித்த தூய்மைப் பணியாளர்கள், அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கை மாளவியார் தெருவைச் சேர்ந்த நாகேஸ்வரி என்ற பெண், தனது ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை தொலைத்துவிட்டு தேடியுள்ளார். காலை தனது தெருவில் வந்து குப்பை சேகரித்துச் சென்ற தூய்மைப் பணியாளர்களிடமும் அதுகுறித்துக் கூறியுள்ளார்.

இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து குப்பைமேட்டில் சுமார் 3 மணி நேரம் தேடி நகையைக் கண்டுபிடித்து நாகேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். சுமார் இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு நாகேஸ்வரி நெகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments