பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு பற்றி என்ஐஏ விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை

0 1657

சென்னையில் தமிழக பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுத் தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரோ சிலரின் தூண்டுதலால்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும், தனி மனிதராக அதைச் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழக உளவுத்துறையினரால் தனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், இது குறித்து மத்திய விசாரணை அமைப்பில் புகாரளிக்க உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments