தமிழ்நாட்டில் 87 சதவீதம் பேருக்கு உடலில் கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளது - தமிழக சுகாதாரத்துறை

0 1144

தமிழ்நாட்டில் 87 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உடலில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை நடத்திய 4 வது கட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிய ஆய்வுகள் 38 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் 4 ஆம் கட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஒமைக்ரான் மூன்றாவது அலைக்கு முன்பாக இந்த ஆய்வு நடைபெற்றது.இதில் திருவாரூரில் செரோ பாஸிட்டிவிட்டி அதிகளவில் 93 சதவீதமாக உள்ளது.தமிழ்நாட்டில் பொதுவாக 87 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியுடன் திகழ்வதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments