சூட்கேஸில் சடலமாக பெண் மீட்கப்பட்ட வழக்கு... பெண் குடியிருந்த வீடு கண்டுபிடிப்பு

0 25590

திருப்பூரில் சூட்கேசில் இருந்து பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், பெண் குடியிருந்த வீட்டை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

உயிரிழந்த பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கடந்த ஒரு மாதமாக வெள்ளியங்காடு கே.எம்.ஜி. பகுதியில் ஒரு நபருடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணுடன் தங்கி இருந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை காலி செய்வதாக கூறிவிட்டு சென்றதாகவும், வீட்டு உரிமையாளரிடம் ஆவணங்கள் எதுவும் வழங்காததால் நபர் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments