நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது கொரோனாவால் பாதித்தவர்கள் விரைவாக குணமடைவதாக ஆய்வில் தகவல்

0 1909
நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது கொரோனாவால் பாதித்தவர்கள் விரைவாக குணமடைவதா

கொரோனா தொற்று பாதித்து ஆக்சிஜன் குறைபாடால் அவதிப்படும் நோயாளிகளை குறைந்த செலவில் விரைவாக குணமடையச் செய்யும் வகையில் நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை முகரச் செய்யும் சிகிச்சை குறித்து கேரளாவின் அம்ரிதா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அம்ரிதா விஷ்வ வித்யபீடத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சேர்ந்து ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், அம்ரிதா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மீது சோதனை செய்து பார்க்கப்பட்டதில், சாதாரண சிகிச்சையோடு நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது, கொரோனா வைரஸ் கிருமிகளை விரைவாக அழித்து நோயாளிகளை சீக்கிரம் குணமடையச் செய்வதாக அம்ரிதா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments