தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதை எதிர்த்து, விவசாய நிலத்திலேயே தற்கொலை செய்துகொண்ட விவசாயி

0 2170

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயி, புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், தனது நிலத்திலேயே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

கைலாசபுரத்தைச் சேர்ந்த சதுரகிரி என்ற அந்த விவசாயியின் நிலத்தை ஒட்டி, மரியராஜ், ப்ரேம்குமார் என இருவர் பட்டாசு ஆலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு ஆலையால் விவசாய நிலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சதுரகிரியின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நிலத்தை அளந்து தர வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது நிலத்திலேயே சதுரகிரி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். சுமார் 4 மணி நேரம் நிலத்தை விட்டு அவரது சடலத்தை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராடிய நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, சடலத்தை எடுத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments