சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது, நுழைவு வாயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்ட அதிமுக எம்.எல்.ஏ

0 3234

சென்னையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் சட்டமன்றத்திற்குள் செல்வதற்கு முன்பாக நுழைவு வாயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட போது, வரலாற்று சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டபேரவை கூட்டத்திற்கு தான் முதல் முறையாக வந்தததால் மகிழ்ச்சியில் விழுந்து கும்பிட்டதாக அவர் தெரிவித்தார். இவர் பொள்ளாச்சி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments