போலீஸ் போல் நடித்து மளிகை கடைக்காரரிடம் 5 பவுன் நகை பறித்து சென்ற கும்பல்..

0 2109
கோவை மாவட்டம் போத்தனூரில் போலீஸ் போல் நடித்து மளிகை கடைக்காரரிடம் 5 பவுன் நகை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் போத்தனூரில் போலீஸ் போல் நடித்து மளிகை கடைக்காரரிடம் 5 பவுன் நகை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் முத்துவேல், முத்துராஜா சிட்கோ எம்.ஜி.ஆர்.நகர் முதல் வீதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்களது கடைக்கு காரில் 4 பேர் வந்த, தங்களை தனிப்படை போலீசார் என கூறி கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது அங்கு புகையிலைப் பொருட்கள் இருந்ததால், விசாணை நடத்த வேண்டும் என கூறி முத்துராஜை காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விடுகிறோம் என மிரட்டி முத்தராஜ் அணிந்திருந்த 5 பவுன் நகை, மற்றும் செல்போன் -ஐ பிடுங்கிக்கொண்டு எல்.ஐ.சி காலனியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துராஜா, முத்துவேல் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments