ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை

0 1925
போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் கடத்தல்காரர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் 3 பேரையும் சுட்டுக்கொன்றதாகவும் அவர்களிடம் இருந்து 36 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு 180 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதி வழியாக போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக கிடைத்த ரகசியத தகவலில் மூன்று பேரையும் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments