விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி மாநிலங்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 1801

விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி மாநிலங்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் நிச்சயம் விமான எரிபொருள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். உலகளாவிய அளவில் எரிபொருளின் விலை உயர்ந்து வருவது கவலை தரக்கூடிய ஒன்றாகும் என்றும் கூறினார்.

தற்போதைய பொருளாதார சூழலில் அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகள் மற்றும் உலகளாவிய பண வீக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments