19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி - பிரதமர் பாராட்டு

0 6636

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஆன்டிகுவாவில் நார்த்சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய இளையோர் அணி உலகக் கோப்பையை வென்றது.

வெற்றிபெற்ற இந்திய அணியினரைப் பாராட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியினர் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் திறமையான கைகளில் உள்ளது என்பதைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments