ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது

0 10230

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி படப்பை குணாவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சேட்டு என்பவனை ஏடிஎஸ்பி வெள்ளதுரை தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

8 கொலை வழக்குகள் உள்பட 46 குற்ற வழக்குகளில் தொடர்புடைய படப்பை குணா, போலீசார் என்கவுண்டரில் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

அவனது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய போலீசார், சித்தாமூர் அருகே தலைமறைவாக இருந்த போந்தூர் சேட்டு என்பவனை கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலை கழிவுகளை டெண்டர் எடுப்பதில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் பிரபு என்பவனை மாம்பாக்கத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

படப்பை குணாவின் கூட்டாளியான பிரபுவிடம் இருந்து ஒரு மெர்சிடெஸ் பென்ஸ், 2 இனோவா உள்பட 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments