புஷ்பான்னா பூவுன்னு நெனச்சியா நோவுடா….! அதிர்ச்சியில் 2 வது கணவர்..! வீட்டில் அரைகுறை ஆடையுடன் சிக்கியது யார் ?

0 11477

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது அவரது 2 வது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். புனிதமான வீட்டை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதாக புஷ்பா மீது புகார் தெரிவிக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

அதிமுகவில் மேயர், எம்.பி என வலம் வந்த சசிகலா புஷ்பா தற்போது பாரதீய ஜனதா கட்சியில் உள்ளார்..! முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வழக்கறிஞர் ராமசாமி என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்..! ஏற்கனவே திருமணமான ராமசாமி தனது முதல் மனைவி சத்திய பிரியாவை கைவிட்டு 2 வதாக சசிகலா புஷ்பாவுக்கு தாலி கட்டி குடித்தனம் நடத்தி வந்தார்.

காதல் தம்பதியரான இருவரும் ராமசாமிக்கு சொந்தமான அண்ணா நகர் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தனது மனைவி சசிகலாபுஷ்பா வீட்டை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதாகவும், தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த மாதம் 12 ந்தேதி மதுரைக்கு நீதிமன்ற பணிகள் தொடர்பாக சென்று விட்டு , 13 ந்தேதி அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பியதாக தெரிவித்து உள்ளார் ராமசாமி.

வீட்டின் கதவை , அமுதா என்ற பெண் வந்து திறந்ததாகவும், வீடு முழுவதும் மது வாடை வீசிய நிலையில் ஒரு படுக்கை அறையில் மனைவி சசிகலாபுஷ்பா போதையில் படுத்திருந்ததாகவும், மற்றொரு படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன் ஆண் ஒருவர் இருந்ததாகவும், அவர்களை தனது செல்போனில் படம் பிடித்த படியே உங்களை எல்லாம் யார் வீட்டுக்குள் விட்டது என்று கேட்டு சத்தமிட்டதாகவும் கூறியுள்ளார் ராமசாமி.

சத்தம் கேட்டு எழுந்து வந்த சசிகலாபுஷ்பா அவர்களை தனது விருந்தினர்கள் என்று கூறியதோடு ராமசாமியின் செல்போனை பறித்து அதில் இருந்த வீடியோவை நீக்கியதோடு அவரையும் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக மற்றொரு செல்போன் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் ராமசாமி, உடனடியாக காவல்துறையினர் அங்கு வராத நிலையில் மனைவி புஷ்பாவின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் அலறிய ராமசாமியின் சத்தம் கேட்டு அவரது ஓட்டுனர் ஓடிச்சென்று போலீசாரை அழைத்து வந்ததாக கூறப்படுகின்றது.

அங்கு வந்த போலீசாரிடம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கம் உடைய அமுதாவுடன் சேரக்கூடாது என்று தனது மனைவி புஷ்பாவை முன்பு தான் எச்சரித்ததாகவும், வாக்குறுதியை மீறி புஷ்பா இவர்களை தனது வீட்டுக்குள் அனுமதித்துள்ளதாகவும், தன்னை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல்விடுத்ததோடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் பொய்யான புகார் கொடுத்து போலீசில் சிக்கவைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார் ராமசாமி.

மேலும் புஷ்பாவின் மோசமான நடவடிக்கையால் தனது 15 வயது மகளின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாவதாகவும், தான் இல்லாத நேரத்தில் வீட்டை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதாகவும் பரபரப்பாக அந்த புகாரின் குற்றஞ்சாட்டி இருந்தார் ராமசாமி.

எல்லாவற்றுக்கும் மேலாக புனிதமான தனது வீட்டில், அந்த அரைகுறை ஆடை ஆசாமியும், அமுதாவும் பாலியல் தொழில் செய்ததாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து போலீசார் சசிகலா புஷ்பா, அவரது தோழி விழுப்புரம் அமுதா, தஞ்சாவூர் ராஜா உள்ளிட்ட 3 பேர் மீதும் கையால் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இது போன்ற சர்ச்சைகள் ஒன்றும் சசிகலா புஷ்பாவுக்கு புதிதல்ல, என்றாலும் இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்ட போது, செல்பேசியை எடுத்த அவரது உதவியாளர் சசிகலா புஷ்பா மீட்டிங்கில் இருப்பதாக கூறி விளக்கம் அளிப்பதை தவிர்த்து விட்டார். அதே நேரத்தில் புஷ்பா மீது இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், ஒரு காலத்தில் ஆசை ஆசையாக தாலிகட்டிய ராமசாமி தற்போது அவஸ்தைக்குள்ளாகி உள்ளார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments