சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு கோடி மதிப்புள்ள ராமர் கற்சிலையை மீட்ட போலீசார்

0 2842
சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ராமர் கற்சிலையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ராமர் கற்சிலையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

ரகசிய தகவலின் பேரில் ஆலந்தூரிலுள்ள SASL என்ற தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் நடத்திய சோதனையில், 2 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்ட பீடத்துடன் கூடிய பழமையான ராமர் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்சிலை குறித்த எந்த ஆவணமும் அந்த தனியார் நிறுவனத்திடம் இல்லாத நிலையில், அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலையை தொல்லியல் துறைக்கு அனுப்பி அதன் தொன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments