கடன் வாங்கித் தருவதாக கூறி சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 பெண்களிடம் 13 லட்ச ரூபாய் மோசடி ; இளைஞர் கைது

0 2956
கடன் வாங்கித் தருவதாக சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 பெண்களிடம் 13 லட்ச ரூபாய் மோசடி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 பெண்களிடம் 13 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சுய உதவிக்குழுவை சேர்ந்த 33 பெண்களின் ஆதார், வங்கி எண்களை பெற்ற சதீஷ்குமார் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் அதை வழங்கி பெண்களுக்கு கடன் பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் 33 பேரையும் தனித் தனியாக சந்தித்து வேறொருவருக்கு வர வேண்டிய பணம் தங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிட்டதாக கூறி பணத்தை திரும்பிப் பெற்றதாகவும், அதற்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கோரி நிறுவனம் தெரிவித்த நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக பெண்கள் தெரிவித்துள்ளனர். நிதி நிறுவனம் அளித்த புகாரில் சதீஷ்குமாரை கைது செய்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments