டெல்லியில் சிவப்பு சந்தனமரத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவன் கைது

0 2549

டெல்லியில் சிவப்பு சந்தனமரத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

புது டெல்லி ரயில் நிலையத்தில் 42 புள்ளி 5 கிலோ எடை கொண்ட செம்மரத்துடன் சிக்கிய அவனிடமிருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பஹார்கஞ்ச் கேட் எண்1 அருகே சந்தேகப்படும் படி நடமாடிய அவனை கண்காணித்த போலீசார் அவனிடமிருந்த டிராலி பேக்கை சோதனையிட்ட போது செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்தது.

உடனடியாக வனத்துறை அதிகாரி வரவழைக்கப்பட்டு அது கடத்தப்பட்ட செம்மரம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments