லாரி உரிமையாளர் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிப்பு ; 4பேர் கைது

0 2010
லாரி உரிமையாளர் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கழிவுநீர் லாரி உரிமையாளர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த 4பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருமாட்டுநல்லூர் கிராமம், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த அரவிந்தன் என்பவர் கழிவுநீர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

நேற்று மாலை வழக்கம்போல் தனது கழிவுநீர் லாரியை எடுத்துக் கொண்டு கன்னிவாக்கம் தைலமர தோப்பு அருகே அரவிந்தன் சென்ற போது 4பேர் கொண்ட ரவுடிகும்பல் அவரை தாக்கி கத்தி முனையில் 2ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments