ஹிஜாப் அணிந்து வரும் மாணவியரை உள்ளே அனுமதிக்க கல்லூரி நிர்வாகம் மறுப்பால் சர்ச்சை..!

0 3668

கர்நாடகத்தைத் தாலிபான் மயமாக்க விட்டுவிட முடியாது என மாநிலப் பண்பாட்டுத் துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

உடுப்பி மாவட்டம் குந்தப்பூரில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியரை உள்ளே அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. மாணவியர் ஹிஜாப் அணிந்து வருவதும், அவர்களை ஆசிரியர்கள் திருப்பி அனுப்புவதும் எனப் போராட்டம் தொடர்கிறது.

இதற்கு முன் மாணவியர் ஹிஜாப் அணிந்துவரவில்லை என்றும், கடந்த 20 நாட்களாகத் தான் இந்தச் சிக்கல் தலையெடுத்துள்ளதாகவும் மாநிலக் கல்வி அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்.

சீருடை என்பது கல்வி நிறுவனத்தின் நடத்தை விதியாகும் என்றும், அதை மீறவும் கர்நாடகத்தைத் தாலிபான் மயமாக்கவும் அனுமதிக்க முடியாது எனப் பண்பாட்டுத் துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments