அசாதுதீன் ஓவைசிக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவு..!

0 2889

அசாதுதீன் ஓவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றுவிட்டு டெல்லிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, ஓவைசியின் கார் மீது ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் காரின் பக்கவாட்டில் தோட்டா துளைத்ததுடன், டயர்களும் பஞ்சரானதால் ஓவைசி மற்றொரு காரில் டெல்லிக்குச் சென்றார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவரைக் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஓவைசிக்கு 24 மணி நேரமும் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments