காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள், பக்கத்துவீட்டுக்காரர் ஏளனமாகப் பேசியதால் மனமுடைந்த தாய் தீக்குளித்துத் தற்கொலை

0 2848

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 17 வயது மகள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சோகத்தில் இருந்த பெண் ஒருவர், பக்கத்து வீட்டுக்காரரின் ஏளனப் பேச்சால், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

நடராஜபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் 17 வயது மகள், காரைக்குடியிலுள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். உடன் படிக்கும் மாணவருடன் பழகி வந்த மாணவி ஒருநாள் அவனுடன் மாயமான நிலையில், அவரது தாய் போலீசில் புகாரளித்துள்ளார்.

போலீஸ் தேடுவதை அறிந்து, மாணவியின் காதலன் அவரை தேவகோட்டை காவல் நிலையம் அருகே கொண்டு வந்து விட்டுச் சென்றிருக்கிறான்.

மகளின் இந்த செயலால் தாய் நொந்து போயிருந்த நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், மகளை இப்படியா வளர்ப்பீர்கள் என ஏளனம் பேசி அவரை மேலும் நோகடித்துள்ளான். இதனால் மனமுடைந்த மாணவியின் தாய், தீக்குளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments