வருகிற 7-ந் தேதி முதல் டெல்லியில் பள்ளிகள் திறப்பு..! கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து அறிவிப்பு

0 6728

கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, தலைநகர் டெல்லியில் 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்கவும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு ஊரடங்கு தொடங்கும் நேரம், 10 மணி என்பதற்கு பதிலாக 11 மணியில் இருந்து காலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

மேலும், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 100சதவீதம் ஊழியர்களுடன் இயங்கவும், கார்களில் தனியாக செல்வோர் முகக்கவசம் அணிய தேவையில்லை என்பன பல்வேறு தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments