உத்தரகாண்டில் கடும் பனிப்பொழிவு.. பல்வேறு இடங்களில் வாகனங்களுடன் சிக்கித் தவித்த மக்களை பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழு.!

0 2583

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில்  வாகனங்களுடன் சிக்கித் தவித்த மக்களை போலீசாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் பத்திரமாக மீட்டனர்.

மீட்பு பணிகளை முடுக்கிவிட்ட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், சாமோலி மாவட்டத்தின் தீபவளிக்கால் பகுதியில் சிக்கித் தவித்த ஆறு பேரையும், திரிஜுகி நாராயண் கோயிலுக்கு கீழே சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சிக்கியிருந்த 2 பேரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்ததாக அறிவித்துள்ளது.

இதே போல, அல்மோரா மாவட்டத்தின் மச் கலி பகுதியில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும் பல இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments