சென்னையில் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை

0 2692
சென்னையில் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை

சென்னை காமராஜர் சாலை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நடுகுப்பம் பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் சோமடோ டெலிவரியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு பணி முடித்து வீடு திரும்பிய அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சிலர், அஜித் குமாரை சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்தது விரைந்து வந்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments