சென்னையில் 1,243 பதற்றமான வாக்குச்சாவடிகள் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

0 1986

சென்னையில் 1,243 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன் கூட்டியே வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் LIVE Streaming மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments