சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே நள்ளிரவில் நோ பார்க்கிங்கில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், அதிவேகமாக சென்று லாரியின் பின்பக்கம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதிய துறைமுகம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த சின்னகண்ணுபுரத்தைச் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
அப்பகுதியில் உள்ள எடை நிலையம் அருகே டிப்பர் லாரி ஒன்று நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்ததை கவனிக்காத மணிகண்டன் அதிவேகமாக சென்று லாரி மீது மோதியதில், அவரது தலை பின்பக்க சக்கரத்தின் மட்கார்டு பகுதியில் சிக்கியது.
இதில், படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments