முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ; தமிழக அரசு கோரிக்கை

0 2164
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு கேரளஅரசு முழு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை மறு ஆய்வு செய்வது குறித்த மத்திய நீர் ஆணையத்தின் நிலை அறிக்கைக்கு பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments