யா-முஹைய்தீன் கடையில் ஊசிப்போன பிரியாணி வழங்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலி ; அசைவ உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

0 71797
அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

விழுப்புரத்தில் உள்ள யா-முஹைய்யதீன் பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தயார் செய்த ஊசிப்போன பிரியாணியை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அசைவ உணவகங்களில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை -திருச்சி சாலையில் உள்ள யா-முஹைய்யதீன் பிரியாணி கடை உட்பட அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட ஒன்றரை கிலோ பிளாஸ்டிக் பைகள், செயற்கை சாயம் ஏற்றப்பட்ட 5 கிலோ கோழி கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இதனையடுத்து, தரமற்ற முறையில் உணவு தயாரித்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments