பேரறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவு தினம் - அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

0 2552

பேரறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அண்ணா நினைவிடத்திற்கு அருகே அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று, அதிமுக சார்பிலும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, அண்ணாவின் சித்தாந்தங்களை பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க, அனைவரும் உறுதியேற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments