வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்... போலீஸ் வந்ததும் வாங்கிய பணத்தை மென்று தின்ற கிராம நிர்வாக அதிகாரி

0 27404

சேலம் மாவட்டத்தில் இலஞ்சம் வாங்கிய பணத்தை மென்று தின்ற கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரி என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அதிகாரி குமரேசனிடம் அணுகிய போது, அவர் ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாதேஸ்வரி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் செய்தார்.

தொடர்ந்து  இலஞ்சப்பணத்தை வழங்கிய போது  மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்ய முயல, கையிலிருந்த இலஞ்சப்பணத்தை குமரேசன் மென்று முழுங்க எத்தனித்த போது பணம் தொண்டையில் சிக்கியதாக சொல்லப்படுகிறது. உடனடியாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments